சிறுகதைகள்

சிறுகதைகள் 

சூத்திர நீதிபதி
-----------------
""ஏண்டா அம்பி மோடி ஆட்க்ஷி சுத்தம் மோசம் "
"ஏன்னா இப்படி பேசறேள்... மோடி கவரண்மெண்ட்டு நம்மவாளுக்கு அதிக கரிஷனம் காட்றதில்லையோ.. "
"போடா அம்பி... இதுவே மன்னராட்சியா இருந்தா பிராமணாளுக்கு தானம் பண்ணுங்கோ னு உத்தரவுப் போட்டிருப்பா"
"மன்னராட்சி மாதரிதானே மோடி ஆட்சியும் இருக்கறது "
"அட அபிஸ்ட்டு... உடுப்பி கோபாலகிருஷ்ணன் என்ன செய்தான் தெரியுமோ... அவாளுக்கு வயசாயிடுத்து... சொளகரியமா வாழ்ந்துண்டு இருக்கான்... "
"சொல்லுங்கோ "
"அவாளுக்கு செங்கல்பட்டு ஜில்லாவில் 4 கிரவுண்ட் மனை இருந்துச்சு "
"22 செண்ட் இடமாச்சே.. பெருமாளுக்கு கோயில் கட்டினால் 100 பிராமணாள் குடும்பம் கஷ்டமில்லாமல் ஜீவிக்குமே ..."
"அதுதா இல்லே... சூத்திர நீதிபதி ஒருத்தன் அந்த இடத்தை நடிகை ஜோதிகா புருஷன் சூர்யா நடத்தற கல்வி அறக்கட்டளைக்கு தானம் பண்ணிடுங்கோனு சொல்லிட்டான்... அந்த உடுப்பி கோபாலகிருஷ்ணனும் தானம் பண்ணிட்டான்... மன்னராட்சியா இருந்தா பிராமணாளுக்கு தானம் பண்ண வெச்சிருப்பா.... மனுநீதியை மன்னர்கன் மதிச்சா... இப்ப பாரு... சூத்திரன் படிக்க தானம் பண்ணிட்டான் பாவி...:
"மோடி ஆட்க்ஷியிலா இப்படி நடக்கறது... ஹரே கிருஷ்ணா.... லோகம் கெட்டுப் போயிடுத்து... மறுபடியும் மனுதர்மம் ஆட்சி வேணுமடா இராமா.... "
-அரங்ககனகராசன்
29042020
--------------------------------------------------------------


மோடியை இழுக்கறே
----------------------------
"ஏண்டீ, காலையிலதானே அம்பது ரூபா தந்தேன் "
"ஆமா அம்பது கொடுத்தீங்க... நேற்றைக்கு நூறு கொடுத்தீங்க... ஞாயிற்றுக்கிழமை கறி எடுக்க முன்னூறு கொடுத்தீங்க... இதுக்கெல்லாம் என் கிட்ட கணக்குக் கேளுங்க "
"ஏண்டிக் கத்தறே "
"நா கத்தறனா... நா கத்தறனா "
"என்னடி ஆச்சு சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்றே "
"நா மட்டுமா சொல்றேன் ... இதோ இது. சொல்றதில்லை "
"என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு... நா எதையோ கேட்டா உங்கம்மா டிவியை காட்றா "
"யப்போ... உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்காப்பா... அம்பது ரூபா தந்துட்டு அய்னூறு தடவை அம்மாவைக் கணக்குக் கேக்கறியே... இந்த ரெண்டு மாசம் என்னப்பா நடக்குது "
"என்னடா நடக்குது "
"உனக்கு ஒன்னும் தெரியாதுப்பா.... ஆக்கி வெச்சா கொட்டிக்கத் தெரியுதில்லை... "
"நீயும்தாண்டா கொட்டிக்கிறே"
"ஆமா... நானும் கொட்டிக்கிறேன்.... ஆனா கேபிளுக்கு நீதானே பணம் கட்றே....அதுவும் ஜி எஸ் டி யோட"
"எனக்கு ஒன்னும் வெளங்கலே... நீயாவது சொல்லேண்டி. "
"ஊரடங்கு போட்ட நாள்லிருந்து கேபிளுக்கு பணம் கட்டிட்டுதானே இருக்கீங்க.. அறிவிருக்கா.... உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா.. எங்கிட்ட கொடுக்கற காசுக்கு கணக்குக் கேட்கத் தெரிஞ்ச இந்த மூஞ்சிக்கு மோடிகிட்ட போய் கணக்கு கேட்க துப்பிருக்கா "
"மோடிகிட்ட நா என்னடி கேக்கனும்.. "
"ஏற்கனவே போட்ட பழைய நிகழ்ச்சியை நாடகத்தை இப்பவும் காட்டிட்டு இருக்கானுக... #பழைய நிகழ்ச்சிக்கு எதுக்குடா பணம் கேக்கறே... ஜி எஸ் டி யும் சேத்து வாங்கறியேனு போய் மோடிகிட்ட கணக்கு கேக்க தைரியமில்லை... எங்கிட்ட மட்டும் கணக்குக் கேக்கறீங்ளே... ஒரு நியாயம் வேணாம் "
"அதுக்கு எதுக்குடி மோடிகூட என்னைக் கோத்து விட்றே "
"யப்பா உன்னால முடியாதில்ல... அப்ப பேசாம இரு... ஊரடங்கு முடியற வரைக்கும் பொத்திக்க வாயை "
"என்னங்கடி ஊரடங்குல எல்லாருக்கும் மறை லூசு ஆயிருச்சா "
"யப்பா... பொத்து... மறை கழண்டவன்கிட்ட கேக்காம திரும்பத் திரும்ப அம்மாவை கேள்விக் கேக்குற"
"அய்ய்யோ ஊரடங்கு முடியறதுக்குள்ள இனி எத்தனை வீட்ல எத்தனைப் பேர் லூசாகறாங்ளோ... "
-அரங்க கனகராசன்
23042020
--------------------------------------------------------------------------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்